திருமலை: நகரி தொகுதியில் நடிகை ரோஜா கபடி போட்டியை தொடங்கி வைத்து விளையாடினார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர் நிலைப்பள்ளியில் நேற்று 7ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. இதில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாடினார். இதனால், அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் மற்றும் கபடி வீரர்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.