சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 55,134 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 56 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 13 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,56,246 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று மட்டும் 510 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 8,39,648 பேர் குணமடைந்துள்ளனர். 4,073 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் மரணம் அடைந்துள்ளார். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,525 ஆக உயர்ந்துள்ளது.