×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரிக்கை: தாசில்தாரிடம் விவசாயிகள் மனு

தங்கவயல்:விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற கோரியும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, தாசில்தார் மூலம் அரசுக்கு கோரிக்கை மனு வழங்கினர். தங்கவயல் தாலுகா கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தங்கவயல் தாலுகா தாசில்தார் அலுவலகம் முன்பு கூடினர். அங்கு சி.ஐ.டி.யூ. தலைவர் கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரியும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் வலியுறுத்தி  கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கு வந்த தாசில்தார் சுஜாதா விடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

Tags : Tashildar , Request for repeal of agricultural laws: Petition of farmers to Tashildar
× RELATED கடலூரில் குடுகுடுப்பைக்காரர்களுக்கு...