×

மகா சிவராத்திரியை முன்னிட்டு 5 லட்சம் ருத்ராட்சங்களிலான சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை

சென்னை: சென்னையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 5 லட்சம் ருத்ராட்சங்களிலான மகா சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது: மகா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் ஆன்மிக திருவிழா ஆர்.ஏ.புரம் சுந்தரம் ஸ்ரீசத்யசாய் கோயில் அருகே உள்ள கபாலீசுவரர் திடலில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களில் (ஐந்து முகங்களில்) உருவாக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களை கொண்டு மகா சிவராத்திரியான 11ம் தேதி இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். ஆகம விசாரதா பாரதிகண்ணன் குருக்கள் விற்பன்னர்கள் குழுவை வழி நடத்துகிறார். சிவ.நிர்மலா ரவி குழுவினரின் பன்னிரு திருமுறை பாராயணத்துடன் சிவ வாத்தியங்கள் முழங்க பூஜை நடைபெறுகிறது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆன்மிக பொருட்கள் கண்காட்சியும் நடக்கிறது. மகாசிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளவும், ஆன்மிக கண்காட்சியை பார்வையிடவும் அனுமதி இலவசம்.


Tags : Shivalingam ,Maha , Special pooja for Shivalingam with 5 lakh Rudrats on the eve of Maha Shivaratri
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்