சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்ட ஆசனூர் வனப்பகுதியில் முலிகை செடி, கொடி, மரங்கள் ஆகியவை உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று அருகே டிபிஎப் பள்ளம் வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ ஏற்பட்டது. தீ வேகமாக பரவுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆசனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் மரம், செடி கொடிகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. வனப்பகுதி சாலையில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீடி சிகரெட் உள்ளிட்ட துண்டுகளை வனப்பகுதிக்குள் வீசக் கூடாது என வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.