×

அனைவரும் வாக்களிப்போம் பரப்பாடியில் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரசாரம்

நாங்குநேரி : நாங்குநேரி பரப்பாடியில் அனைவரும் வாக்களிப்போம் எனும் விழிப்புணர்வு பணியில் திருநங்கைகள் ஈடுபட்டனர்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பரப்பாடி பகுதியில் திருநங்கையர்களை தன்னார்வலர்களாக கொண்டு 100சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பணி நடந்தது.

இதில் வீடுகள்தோறும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், ஒலிபெருக்கி விளம்பரம் மற்றும் திருநங்கையர் பாடல்கள் மூலமும் 100சதவீதம் வாக்களிக்க வேண்டும், தேர்தல் நாள் ஏப்.6ம்தேதி என்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
பிரசாரத்திற்கு நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி தலைமை வகித்தார். ரெட்கிராஸ்  தன்னார்வலர் சபேசன் உறுதிமொழி வாசித்தார். திருநங்கையர்கள், தாமரை, வினோ, சுஜி, காவ்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Nanguneri: Transgender people were involved in the awareness campaign that everyone will vote in Nanguneri.
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...