சென்னை: லலிதா ஜுவல்லரி-க்கு சொந்தமான 27 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய நகையை வாங்கி புதிதாக மாற்றும்போது சேதாரம் என்று பலகோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையின் போது ஏராளமான கணக்கில் வராத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.