×

திமுக-மார்க்சிஸ்ட் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை, மார்ச் 7: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்க உள்ளது. தேர்தல் நெருங்கி வருதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும்-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும் கையெழுத்திட்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கே..என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு அடங்கிய தொகுதி பங்கீடு குழுவினர் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர், ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ேக.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழுவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். திமுக சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்படுகிற தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லி இருக்கிறார்கள். அது எங்களுக்கு போதுமானது அல்ல என்று கூறி இன்னொரு எண்ணிக்கையை கூறியுள்ளோம். மேலும் எங்களுடைய மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசி அறிவிப்பதாக கூறி விட்டு வந்துள்ளோம். எங்களுடைய எண்ணிக்கை கூறியுள்ளோம். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதிமுக கூட்டணி என்பது காயலான் கடை இன்ஜின், எல்லாம் கழன்று போன இன்ஜின். அது எல்லாம் ஓடாது. அக்குவேராக ஆணி வேராக கழன்று கிடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Balakrishnan , DMK-Marxist 2nd phase talks completed Good results will come We expect that: K. Balakrishnan interview
× RELATED ஒன்றிய அரசில் தீவிரமாக வேலை செய்யும் 2 துறை ஈ.டி., ஐ.டி: பாலகிருஷ்ணன் விளாசல்