சென்னை: அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி எதற்கும் பயன்தராதது; எப்போது செல்வார்கள் என்று தெரியாது என கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். பாஜகவுக்கு பயந்தே அதிமுக அனைத்தையும் செய்து வருவதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.