×

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’...! வீட்டின் முன் போர்டு வைத்த தம்பதி: பசுமலையில் அசத்தல்

திருப்பரங்குன்றம், மார்ச் 6: திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்று தம்பதி வீட்டின் முன்பு போர்டு வைத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் லோகராஜ். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசலில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இந்த பதாகையை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பலரும் தாங்களும் இதுபோன்று வீட்டின் முன்பு எழுதி வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அரசியல் கட்சியினர் பரிசு பொருள்களை வழங்குவதை தவிர்க்கவும் இந்த பதாகை வாய்ப்பாக உள்ளது. மேலும் அனைவருக்கும் வாக்களிக்கும் அவசியத்தை உணர்த்துவதுடன் எங்கள் வாக்கை நியாயமாக செலுத்துவோம் என்பதை சக வாக்காளர்களுக்கு உணர்த்தவே இந்த பதாகையை வைத்துள்ளோம்’’ என தெரிவித்தனர். மக்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த தம்பதியின் முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



Tags : ‘Our vote is not for sale’ ...! Couple boarded in front of the house: Stunning in the greenery
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...