திருப்பத்தூர்: முதல்வர் பழனிசாமி அறிவித்தபடி சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாகின்பக் போராட்டக்காரர்கள், முதல்வர் பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளனர். காயல்பட்டினம் பகுதியில் பேசிய முதல்வர் பழனிசாமி, போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதி அளித்தார். முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.