×

கூவத்தூரை கொஞ்சம் நெனச்சுப் பாருங்க...அமைச்சர்களிடம் கெஞ்சிய மாவட்ட செயலாளர்

அதிமுகவில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் ஆக உள்ள திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தி.மு.க.விடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் மீண்டும் தற்போது திருப்போரூர் தொகுதியில் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்தால் தன்னை மாவட்ட செயலாளர் ஆக்க வேண்டும் என்றும், அவர் மாவட்ட செயலாளராக தொடரும் பட்சத்தில் தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். தண்டரை மனோகரன் சொல்வதிலும் ஒரு  நியாயம் இருக்கத்தான் செய்யுது என்று உணர்ந்த அ.தி.மு.க. தலைமை ஏதாவது ஒன்றை விட்டுக் கொடுக்கச்சொல்லி ஆறுமுகத்திடம் கூறியுள்ளது.

இதனால் அதிர்ந்து போன திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தனது மனைவியுடன் சென்று ஒவ்வொரு அமைச்சராக சந்தித்து ‘கூவத்தூரை நினைத்துப் பாருங்க, அன்னிக்கு எல்லா ஏற்பாட்டையும் நான்தான் முன்னின்று செய்தேன், அதற்காகவாவது எனக்கு சீட் கொடுங்க, 2 தேர்தலில் தோற்று கடனாளி ஆகி விட்டேன். எம்.எல்.ஏ. ஆகவில்லை என்றால் என் நிலை அவ்வளவுதான்’ என்று புலம்பி வருகிறாராம். ஆறுமுகத்தின் நிலையைப் பார்த்து அமைச்சர்கள் கப்சிப் ஆக உள்ளனராம்.

Tags : Guwahati ,District Secretary , Take a look at Guwahati ... District Secretary who begged the ministers
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...