×

எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டேன்: டிடிவி.தினகரன் பேட்டி

சென்னை: தி.நகரில் வசிக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கியுள்ளார். அந்த வீட்டில் சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
இதையடுத்து, டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலா மிகவும் சகஜமாக உள்ளார். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த நிகழ்வுகளை பற்றி அவர் ஏதும் பேசவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க அமமுக தொடர்ந்து போராடி வருகிறது. அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவித்துள்ளது குறித்து நான் ஏதும் கூறவேண்டியது இல்லை. என்னை யாரும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை. யாருக்கும் அடிபணியவும் மாட்டேன். இவ்வாறு கூறினார்.



Tags : DTV.Dhinakaran , I will not submit to any threat: DTV.Dhinakaran interview
× RELATED பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி...