×

மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எழுதிய ‘ஒரு’ கடிதம்… ரமலான் நாளில் நடக்க இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாற்றியமைத்த மத்திய அரசு!

டெல்லி : மதுரை எம்பி சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று ரம்ஜானுக்காக தேர்வு தேதிகளை மாற்றியமைத்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

*10 -12ம் வகுப்பு தேர்வுகள்*

இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாளான ரமலானுக்கு இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது. இந்த தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கடிதம் தொடர்பாகப் பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதன்படி மே 13,15 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு நாட்களுக்கும் அந்த நாட்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு நாட்களுக்கும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி 10ம் வகுப்புக்கு மே 15ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு மே 21ம் தேதிக்கும், அன்று நடைபெறவிருந்த கணித தேர்வு ஜூன் 2ம் தேதியும் மாற்றப்பட்டுள்ளன.அதேபோல 12ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மே 13ல் நடைபெறவிருந்த இயற்பியல் ஜூன் 8ல் நடைபெறும். வணிகப் பிரிவு மாணவர்களுக்கு மே 31ஆம் தேதி கணித தேர்வு நடைபெறும். கலை பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 2ல் நடைபெறவிருந்த புவியியல் தேர்வு அடுத்த நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Tags : Madurai ,Venkatesh ,Central Government ,CBSE , சிபிஎஸ்இ
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...