சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ரயில்வே, கப்பல் ஊழியர்களுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.