தூத்துக்குடி: தாமிரபரணியில் சட்டவிரோத குவாரி மூலம் மணல் அள்ளுவதை தடுக்ககோருவது பற்றி பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக புவியியல், சுரங்கத்துறை இயக்குனர், தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. ஆழ்வார்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக குவாரி அமைத்து மணல் அள்ளப்படுவதாக ஞானசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.