×

எரிவாயு விலை உயர்ந்துவிட்டது. வீட்டில் உள்ள அடுப்புகளுக்கு தீ வைத்துவிடுங்கள் : ராகுல் காந்தி ஆவேசம்

சென்னை: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 3 முறை சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ல் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. பிப்ரவரி இறுதியில் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் மார்ச் முதல் நாளான இன்றும்  சிலிண்டர் விலை மேலும் ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய விலை ரூ.835ஆக உள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,எரிவாயு விலை உயர்ந்துவிட்டது. வீட்டில் உள்ள அடுப்புகளுக்கு தீ வைத்துவிடுங்கள். தொழில்களை மூடிவிடுங்கள்.வெற்று வாக்குறுதியை சாப்பிடுங்கள் என்பதே மக்களுக்கு மோடி அரசின் அறிவுரையாகும், என்று தெரிவித்துள்ளார்.


Tags : Rahul Gandhi , ராகுல் காந்தி
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...