×

சென்னையில் பணிபுரிந்த 11 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

சென்னை: சென்னையில் பணிபுரிந்த 11 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை வில்லிவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்திதேவி, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இன்ஸ்பெக்டர்கள், ஜெயசந்திரன் அமைந்தரை காவல் நிலையத்திற்கும், கலையரசன் ராயலா நகர் காவல் நிலையத்திற்கும், செல்வி வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கும், பிரபு காசிமேடு காவல் நிலையத்திற்கும், சுப்ரமணியன் அசோக்நகர் காவல் நிலையத்திற்கும், மஞ்சுளா அண்ணாநகர் காவல் நிலையத்திற்கும் என சென்னையில் 11 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 526 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Chennai , 11 inspectors transferred from Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...