×

6 கிராம் நகை கடன் தள்ளுபடியாம்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல்: அரசு விழாவில் அதிர்ச்சி

திண்டுக்கல்:திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் நடந்த விழாவில், 6 பவுனுக்கு கீழ் வாங்கிய நகை கடன் தள்ளுபடி என்பதற்கு பதிலாக ஆறு கிராமிற்கு கீழ் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி என  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டியில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருந்த விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.  இதில்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்று வழங்கி பேசுகையில், ‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சட்டசபையில் கூட்டுறவு வங்கிகளில் ஆறு பவுனுக்கு  கீழ் நகை அடகு வைத்தவர்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளார். ஆகையால் கூட்டுறவு வங்கியில் ஆறு கிராமிற்கு கீழ் நகை அடகு வைத்தவர்களின்  கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உளறிக் கொட்டினார்.அமைச்சர் கலந்து கொண்ட கடைசி அரசு நிகழ்ச்சியிலும் என்ன பேசுவது என்னவென்று தெரியாமல் வழக்கம் போல் உளறியது அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



Tags : Minister ,Sinewassan ,Government Festival , திண்டுக்கல் சீனிவாசன்
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...