சென்னை: பெரம்பலூர் சிறுமி பாலியல் வழக்கில் 15 ஆண்டுகள் தண்டனை பெற்ற ராஜா என்பவரின் மேல்முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணையில் முரண்பாடு உள்ளதாக கூறி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மலர்கொடி, அரசு வழக்கறிஞர் வினோத்குமார், தீர்ப்பளித்த நீதிபதி விஜயகாந்த் ஆகியோர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.