×

மணமேல்குடியில் இருந்து சிங்கவனம், அத்தாணி வழியாக பேராவூரணிக்கு பேருந்து இயக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி : மணமேல்குடியில் இருந்து சிங்கவனம், அத்தாணி வழியாக பேராவூரணிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணமேல்குடி அடுத்த இடையாத்திமங்கலம், ஒல்லனூர், காரக்கோட்டை, சிங்கவனம், தினையாகுடி, மாவிளங்காவயல், பூந்தோட்டம், திருவப்பாடி, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணி சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இருந்து அந்த வழியே உள்ள பெருமகளுர் பகுதிக்கும் சென்று வருகின்றனர்.

இவ்வாறு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மணமேல்குடி, திருவப்பாடி, கண்டனிவயல் போன்ற பகுதிகளுக்கு சென்று பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் பேராவூரணிக்கோ, பெருமகளுருக்கோ செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மணமேல்குடியில் இருந்து இடையாத்திமங்கலம், ஒல்லனூர், காரக்கோட்டை, சிங்கவனம், தினையாகுடி, திருவப்பாடி, அத்தாணி, தூராங்குடி, பெருமகளுர் வழியாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இதுகுறித்து சமூக ஆர்வலரான ஒல்லனூரைரை சேர்ந்த கவுரிசங்கர் கூறியதாவது:

இடையாத்திமங்கலம், ஒல்லனூர், காரக்கோட்டை, தினையாகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் அடிக்கடி பேராவூரணிக்கும், பெருமகளுருக்கும் செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் பேராவூரணியில் உள்ள கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே மணமேல்குடியில் இருந்து இடையாத்திமங்கலம், ஒல்லனூர், காரக்கோட்டை, சிங்கவனம், தினையாகுடி, திருவப்பாடி, அத்தாணி, தூராங்குடி, பெருமகளுர் வழியாக பேராவூரணிக்கு தினமும் 3 நடைகள் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.

Tags : Sandamelku ,Sinhala ,Atani , Aranthangi: Public demand for government bus service from Manamelkudi to Peravurani via Singavanam and Attani
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 19பேர் கைது:...