×

நடுவழியில் பஞ்சரான தனது காருக்கு ஸ்டெப்னி மாட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி.. இணையவாசிகள் பாராட்டு!!

பெங்களூரு : கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரோகிணி செந்தூரி பஞ்சரான தனது காரின் டயரை கழற்றி மாட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்ற போது, அவரது காரின் டயர் பஞ்சராகி உள்ளது. இதனால் ரோகிணி சிந்தூரி தமது காரில் இருந்த ஜாக்கி உதவியுடன் பஞ்சரான டயரை கழற்றி ஸ்டெப்னி டயரை மாட்டி உள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் பெண் ஒருவர் தானே கார் டயரை கழற்றி மாட்டியதை பார்த்து செல்போனில் வீடியோ பிடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன்னம்பிக்கையுடன் செயற்பட்ட மாவட்ட ஆட்சியர் ரோகினி செந்தூரியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆளும் கட்சியினர் எதிர் கட்சியினர் என்று பாகுபாடு பார்க்காமல் தவறு செய்தால் தட்டிக் கேட்பதில் அஞ்சாதவர் என்று பெயர் பெற்றவர் ரோகினி செந்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : IAS ,Stepney , ரோகிணி செந்தூரி
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு