×

உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: கொரோனா விதிமுறைகள் தொடரும்

புதுடெல்லி: கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகள் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சக செயலர் அஜய்பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கொரோனா தொற்று குறைவதால் அலட்சியமாக இருக்கக் கூடாது, வழக்கமான விதிமுறைகளைத் தொடர வேண்டும் என அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Home Ministry ,Corona , Home Ministry Announcement: Corona regulations will continue
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!