×

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனை பரோலில் விடுவது பற்றி விரிவான அறிக்கை தர ஆணை..!!

மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரனை ஒருமாத பரோலில் விடுவது பற்றி விரிவான அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் தொடர்ந்து 3ம் முறையாக பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரோல் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். கொரோனா காலத்தில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு 3 மாத கால விடுப்பி வழங்க கோரி மனு அனுப்பினேன் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ravichandra ,Rajiv , Rajiv murder, Ravichandran, parole
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...