×

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்; குடும்பத்தினருக்கு இரங்கல் என ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார். தா.பாண்டியன் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும் என்று இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர் தா.பாண்டியன் என்று டி.டி.வி. புகழாரம் சூட்டியுள்ளார். தா.பாண்டியனின் மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும் என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ்ட் வேறொன்று வீழ்ந்திருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறிப்பிட்டுள்ளார். சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய மாபெரும் போராளி தா.பாண்டியன் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தா.பாண்டியனின் மறைவு வேதனையளிக்கிறது; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.


Tags : Pandian Diocese , Indian Comm. Party, senior leader D. Pandian, demise, leaders mourn
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...