×

பெலகாவி மக்களவை மற்றும் 3 பேரவை தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் பாஜ, காங்கிரஸ்

பெங்களூரு: மாநிலத்தில் காலியாக இருக்கும் பெலகாவி மக்களவை தொகுதி மற்றும் மஸ்கி, சிந்தகி, பசவகல்யாண் ஆகிய மூன்று பேரவை தொகுதிகளுக்கு எந்த தேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கும் சூழ்நிலை உள்ளதால், தேர்தலை சந்திக்க ஆளும் பாஜ மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தயாராகி வருகிறது.  முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்கடி காலமாகியதால் பெலகாவி மக்களவை தொகுதி காலியாகவுள்ளது. அதேபோல் தேர்தல் தகராறு வழக்கு காரணமாக மஸ்கி பேரவை தொகுதியும் இரு எம்எல்ஏக்கள் காலமாகியதால் சிந்தகி மற்றும் பசவகல்யாண் ஆகிய இரு பேரவை தொகுதிகள் காலியாகவுள்ளது. இத்தொகுதிக்கு மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரணதீப்சிங் சுர்ஜிவாலே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைமுதல்வர் பரமேஸ்வர், மாநில செயல்தலைவர்கள் ஈஸ்வர் கண்ட்ரே, சதீஷ்ஜார்கிஹோளி, சலீம் அகமது, ராமலிங்கரெட்டி, துருவநாராயண், மேலவை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீரப்பமொய்லி, கே.எச்.முனியப்பா, ரகுமான்கான் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சி வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. வரும் இடைத்தேர்தலில் இதை தவிர்க்கும் வகையில், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதன் மூலம் மீண்டும் கட்சியின் பலத்தை காட்ட வேண்டும் என்ற ேநாக்கத்தில் டி.கே.சிவகுமார் தேர்தல் பணியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டும் என்பதும் டி.கே.சிவகுமாரின் கருத்தாகவுள்ளது. இது தொடர்பாக கட்சி மேலிட பொறுப்பாளர் ரணதீப்சிங் சுர்ஜிவாலேவிடம் பேசியுள்ளார். அவரும் கட்சி தேர்தல் பணி குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஆளுக்கட்சியான பாஜவினர் இடைத்தேர்தல் சந்திப்பது குறித்து ஆலோசிக்கும் கூட்டம் அடுத்த வாரம் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நடக்கிறது.

இதில் முதல்வர் எடியூரப்பா, கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, பிரகலாத்ஜோஷி, துணைமுதல்வர்கள் கோவிந்தகர்ஜோள், லட்சுமண்சவதி, அஷ்வத் நாராயண், அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, ஆர்.அசோக் உள்பட மூத்த தலைவர்கள் கலந்துக்கொள்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில் மஜத தேர்தல் குறித்து சிந்திக்கவில்லை. காரணம் அக்கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்க முடிவு செய்துள்ளது.

இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது



Tags : Baja ,Congress ,3 Council of the Council of the Intermediation , BJP, Congress preparing to contest Belgaum Lok Sabha and 3rd Assembly constituency by-elections
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...