ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி 50 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பெரியகுளத்தில் ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டுக் கூடாரத்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் 50 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து கடலாடி பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.