சென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.