செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் ஓய்வுபெற்ற விஏஓ செந்தாமரை வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கண்ணிவாக்கத்தில் உள்ள வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வைரநகை, வெள்ளி பொருட்களும் கொள்ளை போனது. செந்தாமரை குடும்பத்துடன் சென்னை சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.