சென்னை: பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை இறுதி செய்யவே அதிகாரம் உள்ளது. திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விதியை மீறி டெண்டர் இறுதி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ரூ.3159 கோடி மதிப்புள்ள டெண்டர் விட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது.