டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்ததால் கடந்த 7ம் தேதி கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் தபோவன், ரிஷி கங்கா நீர் மின்திட்டத்தில் பணியாற்றிய 200க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை மொத்தம் 68 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. 136 பேர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், காணாமல் 136 பேரையும் இறந்தவர்களாக அறிவிக்க, உத்தகாரண்ட் அரசு முடிவு செயதுள்ளது.