பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு, கடந்த 1951-ம் ஆண்டு நடந்த தேர்தலில், இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நா.மகாலிங்கம் மற்றும் பி.கே.திருமூர்த்தி ஆகிய இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நா.மகாலிங்கம் மற்றும் கே.பொன்னையா ஆகிய இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார் என்ற விதிமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது.