×

புதுச்சேரியில் பாஜ கூட்டணி வெற்றி பெறும்: பாஜ தேர்தல் பொறுப்பாளர் சுரானா உறுதி

பெங்களூரு: புதுச்சேரியில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என தேர்தல்  பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறினார். கர்நாடக மாநில பாஜ துணை தலைவரும் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான நிர்மல்குமார் சுரானா கூறியதாவது, ``புதுச்சேரியில் இருந்த நாராயணசாமி தலைமையிலான ஆட்சி மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஐந்தாண்டில் புதிய திட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக சுற்றுலா துறை முற்றிலும் முடங்கியது. மில்கள் அதிக அளவில் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்க விடப்பட்டனர். ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்படாத நிலையில்  கடைகள்  மூடப்பட்டு புதுச்சேரி மக்கள் மிகவும் துன்பத்தை அனுபவித்தனர்.

 நாராயணசாமியின் ஆட்சி பறிபோனதற்கு பாஜ காரணம் கிடையாது.  புதுச்சேரியில் அதிக அளவில் சுற்றுலா தலங்கள் உள்ளன. அதை சீரமைப்பு  செய்தால் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டால் அதன் மூலம் மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். பாஜ, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது உறுதி. புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடியின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP ,Pondicherry ,Surana , In Puducherry, BJP alliance, victory, Surana, sure
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு