×

மழையால் மீண்டும் சேறு, சகதி `சாக்லேட் சிட்டியாக’ மாறிய ராஜபாளையம்

ராஜபாளையம் : திடீனெபெய்த மழையால் சகதி தேங்கி மீண்டும் ராஜபாளையம் நகர் பகுதி சாக்லேட் சிட்டியாக மாறியுள்ளது.
ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து பெய்து வருகிறது. இதன் காரணமாக நகர்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாய் மாறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக ராஜபாளையத்தை பலரும் இணையதளங்களில் `சாக்லேட் சிட்டி’ என  கலாய்த்து வருகின்றனர். திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதியில் கூட பல இடங்களில் சாலைகள் அமைக்காமல் இருப்பதால் தொடர்ந்து இந்த அவல நிலை நீடித்து வருகிறது.  இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்காமல் உள்ளது.

இதனால் நகர் பகுதியை வாகனங்கள் கடந்து செல்வதற்கு பலமணி நேரமாவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக அனைத்து பணிகளையும் விரைவில் முடித்துவிட்டு சாலை அமைத்திடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajapalam , Rajapalayam: The Rajapalayam area has once again become a chocolate city due to the sudden rains.
× RELATED பலசரக்கு கடைக்குள் புகுந்து பெண்...