×

மேட்டு கடை பகுதியில் அமராவதி பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் திறந்த வெளி போல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி-இது உங்க ஏரியா

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே மேட்டுக்கடை பகுதியில் உள்ள பாலத்தின் பக்க வாட்டுச்சுவர்கள் சேதமடைந்து திறந்த வெளி போல் அபாயகரமான நிலையுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி அடுத்த ராஜபுரம் அமரவதி பாலத்தில் மேட்டுக்கடை பகுதி அரவக்குறிச்சி போகும் பகுதியில் பக்கவாட்டு சுவர்கள் சுமார் 10 அடிக்கு மேல் சேதமடைந்து திறந்த வெளி போலுள்ளது. இவ்வழியாக பேருந்துகள், லாரிகள், கார்கள் டூவீலரில் என ஏராளமான வாகனங்கள், சின்னதாராபுரம், தாராபுரம், பொள்ளாச்சி, பழனி, கேரளா, கரூர் ,ஈரோடு, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றன மேலும் அரவக்குறிச்சி பகுதியில் இருந்து டூவீலர்களில் பாலம் கடந்து அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அரவக்குறிச்சி அருகே ராஜபுரம் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் தெற்குப் மேட்டுக்கடை பகுதியிலுள்ள பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் சேதமடைந்து திறந்த வெளி சேதமடைந்து திறந்த வெளி போல் அபாயகரமான நிலையுள்ளது. இதனால் இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி ஆற்றின் உள்ளே பாய்வதற்கு வாய்ப்புள்ளது. இது போன்று பெரும் விபத்துகள் ஏற்படும் முன் இந்த பாலத்தின் பக்கவாட்டின் சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Amarawati Bridge , Aravakurichi: The side walls of the bridge over the Amaravathi river near Aravakurichi were damaged and opened.
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...