×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் தென்கிழக்கு மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல சுழற்சி எதிரொலியாக 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா கூறப்பட்டுள்ளது. வெளியிட்ட அறிவிப்பு: கேரளாவின் வடக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில், லேசான மழை பெய்யலாம். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல், 26ம் தேதி வரை, தமிழகம், புதுவையில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

Tags : Kowai ,Nilagiri ,Tamil Nadu , Chance of rain in 4 districts including Coimbatore and Nilgiris in Tamil Nadu in next 24 hours: Meteorological Center Information ...!
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து