×

வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும் :முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்த சரவெடி அறிவிப்பு!!


விழுப்புரம் : நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1,503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் குடிநீர் திட்டங்களால் மாநிலத்தில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது என்றார். தமிழகத்தில் நீர் ஆதாரத்தை மேம்படுத்தவே குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்கு மேடைக்கு முதல்வர் பழனிசாமி வந்ததால் பொது மக்கள் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். முன்னதாக ஆத்தூரில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், மகளிர் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதாவின் வழியில் பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வர தாமதம் ஆனது. இதனால் அவருக்கு கும்ப மரியாதை தருவதற்காக அழைத்து வரப்பட்டு இருந்த பெண்கள் வெயிலில் தரையில் உட்காரவைக்கப்பட்டு இருந்தனர்.2 மணி நேரங்களுக்கு மேல் வெயிலில் காத்திருந்ததால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். 


Tags : Chief Minister ,Edappadi Palanisamy ,Saravedi , முதல்வர் எடப்பாடி பழனிசாமி
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...