×

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் நிலையில் 210 மெ. வா மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் நிலையில் 630 மெகாவாட், 2-வது நிலையில் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தி நடை பெறுகிறது.

 2 வது நிலையில் 2 அலககளில் 600 மெகாவாட் வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் நிலையில் 3 வது அலகில் உள்ள கொதிகலன் குழாய் இன்று காலை திடீர் என பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். விரைவில் மின் உற்பத்தியை தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Tags : Thiruvallur District ,Vadchennya Thermal Power Station , 210 m in the first stage of North Chennai Thermal Power Station, Tiruvallur District. Impact on power generation
× RELATED இன்றுடன் பிரசாரம் முடியும் நிலையில்...