சென்னை : மதுராந்தகம் அருகே இரும்புலி கிராமத்தில் மனைவியை தீ வைத்து எரித்தபோது காயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் இறந்துள்ளார். இரும்புலி கிராமத்தில் குடும்பத்தகராறில் நேற்று மனைவி ஜீவாவை தீ வைத்து கணவர் பார்த்திபன் கொன்றது குறிப்பிடத்தக்கது.