சென்னை: மின்சார வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு 2019 மார்ச்சில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழங்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.