×

மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை: ராகுல் காந்தி பேச்சு

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி விவசாயிகளுடன் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். பின்னர் பொது மக்களிடம் பேசிய அவர்; இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை. 3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப்போவதில்லை, இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கும் திட்டமே இந்த வேளாண் மசோதா சட்டம் எனவும் கூறினார்.


Tags : government ,Rahul Gandhi , The central government could not understand the pain of the farmers: Rahul Gandhi speech
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு