×

புதுச்சேரியில் நேற்று திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரியில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அத்துடன் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நேற்று இருசக்கர வாகனத்துடன் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். மேட்டுப்பாளையம் வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்த ஹசினா பேகம் சென்ற பெண், வாசலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட இரு சக்கர வாகனத்தை மீட்க முயற்சித்த போது இந்த விபரீதம் நடந்துள்ளது. அவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து, நேற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண், தற்போது சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : new , Puducherry, flood, woman, corpse, rescue
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...