சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் முதியவர் கஜேந்திரன்(84) என்பவரிடம் நூதன முறையில் நகை பறிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்த முதியவரிடம் உறவினர் போல பேசி அவர் அணிந்திருந்த 4.5 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.