×

ஜி.கே.மணி அறிவிப்பு பாமக சிறப்பு பொதுக்குழு வரும் 25ம் தேதி நடக்கிறது

சென்னை: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தேதி மாற்றம் செய்து வரும் 25ம் தேதி நடைபெறும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் நிலையிலான களப்பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் 22ம் தேதி பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டங்கள் வரும் 25ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

Tags : G. ,Q. ,Baumaka Special General Committee , GK Mani's announcement will take place on the 25th of the Pamaka Special General Committee
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்