×

பல்வேறு இடங்களுக்கு தி.நகரில் இருந்து எஸ்இடிசி பேருந்துகள் இயக்கம்

சென்னை: பயணிகளை கவரும் விதமாக தி.நகரில் இருந்து தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு எஸ்இடிசி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோருக்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகளை கவரும் விதமாக தி.நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மூன்று முக்கிய இடங்களுக்கு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம் இப்பகுதியை சேர்ந்த மக்கள் கோயம்பேட்டுக்கு வராமல் இங்கிருந்தே நேரடியாக பயணிக்க முடியும். அதன்படி தி.நகரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் விரைவு பஸ் சைதாப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சென்றடையும். இதேபோல் இரவு 9.30 மணிக்கு தி.நகரில் இருந்து புறப்படும் பஸ் இதே வழித்தடத்தில் தஞ்சாவூர் சென்றடையும். இரவு 10 மணிக்கு புறப்படும் மற்றொரு பஸ் இதே வழித்தடத்தில் கும்பகோணம் சென்றடையும். இதில் பயணிக்க விரும்புவோர் tnstc.in என்ற இணையதளத்தளம் மூலமாகவும், போக்குவரத்துத்துறையின் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம், என்றனர்.

Tags : SEDC , SEDC buses ply from the city to various destinations
× RELATED தானியங்கி முறையில் சுத்தம் செய்ய பஸ்...