×

சட்டபேரவை தேர்தல் பாமக சார்பில் போட்டியிட 23 முதல் விருப்ப மனு

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட  விரும்புவோரிடமிருந்து பிப்ரவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள பாமக மண்டல அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். வரும் 23ம் தேதி காலை 10.30 மணி முதல் 26ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கண்ட அலுவலகத்தில் பெற்று, நிரப்பி, உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம். பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000, தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000, அனைத்து தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5,000 வீதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Electoral Phamaga , 23 is the first optional petition to contest on behalf of the legislature election pamphlet
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...