சென்னை: மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஸ்கரனை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வரன் மனு தொடுத்துள்ளார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டு அனுபவம் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு பதில், 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.