கோவை: சி.பி.எஸ்.இ. 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம் பூசுவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு அனுமதித்ததை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆரிய வித்தைகளை தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.