×

வளிமண்டல மேலடுக்கு சுயற்சி!: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்..!!

சென்னை: வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியில் 9, குன்னூரில் 7, செத்துப்பாறையில் 6, அலகாரியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியின் பிற இடங்களில் நாளை மறுநாள் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Atmospheric Overlay Self, 5 District, Heavy Rain
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...