மதுரை: தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இன்று கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக தடை விதித்துள்ளது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.